இன்று காஷ்மீர் மற்றும் லடாக் அதிகாரப்பூர்வமாக இரண்டு யூனியன் பிரதேசங்களாகியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.மேலும் காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது .பின்னர் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.இதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்தார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்த நிலையில்,காஷ்மீர் மறுவரையரை சட்டம் அக்டோபர் 31 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்தது .அக்டோபர் 31 -ஆம் தேதி முதல் ஜம்மு-காஷ்மீர் தனி யூனியனாகவும், லடாக் தனி யூனியனாகவும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று ஜம்மு காஷ்மீருக்கு கிரிஷ் சந்திரா மர்மு, லடாக்கிற்கு ஆர்.கே. மாத்தூர் ஆகியோர் துணை நிலை ஆளுநர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல் இன்று இவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.இதனையடுத்து இந்த இரண்டு யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
மேலும் காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக உதயமாகிவுள்ள நிலையில் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 28 -ஆக குறைந்துள்ளது.யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 7 -லிருந்து 9 -ஆக உயர்ந்துள்ளது.
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…