Categories: இந்தியா

வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் – ஜெகன் மோகன் ரெட்டி!

Published by
கெளதம்

ஆந்திரப் பிரதேசம் : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பற்றிய பரபரப்பான விவாதத்திற்கு மத்தியில், தேர்தலில் வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும் என ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான சில வாரங்களுக்குப் பிறகு, ‘எக்ஸ்’ தளத்தின் உரிமையாளரும் டெஸ்லா சிஇஓவுமான, எலோன் மஸ்க், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நாம் அகற்ற வேண்டும். மனிதர்கள் அல்லது AI மூலம் ஹேக் செய்யப்படும் ஆபத்து உள்ளது என்று ட்வீட் செய்திருந்தார்.

இவ்வாறு, எலோன் மஸ்க் EVM-களின் நம்பகத்தன்மை குறித்த கருத்து தெரிவித்திருப்பது விவாதத்தை எழுப்பியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் மஸ்கின் கருத்துக்களைப் பார்த்து, EVMகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்ப தொடங்கினர்.

அந்த வகையில், இன்று ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில்,”ஜனநாயகத்தில் மேம்பட்ட நாடுகளில் வாக்குச்சீட்டு முறையே உள்ளன, வாக்கு இயந்திரங்கள் இல்லை. நமது ஜனநாயகத்தின் உண்மையான உணர்வுகளை நிலைநாட்ட நாமும் வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், EVM வாக்குப்பதிவு முறையில் வலுவான தொழில்நுட்ப மற்றும் நிர்வாக பாதுகாப்புகள் இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது.

Published by
கெளதம்

Recent Posts

live : தமிழக சட்டப்பேரவை முதல்..வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல் வரை!

சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…

48 minutes ago

ரசிகர்களே ரெடியா? சேப்பாக்கத்தில் சென்னை – டெல்லி மோதல்! இன்று டிக்கெட் விற்பனை!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன்  காத்திருந்த சென்னை…

2 hours ago

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் : “ஆபரேஷன் பிரம்மா” உதவிகரம் நீட்டிய இந்தியா!

பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…

2 hours ago

அப்போ கே.எல்.ராகுல்…இப்போ ரிஷப் பண்ட்? டென்ஷனாகி திட்டிய லக்னோ உரிமையாளர்!

லக்னோ :  சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…

3 hours ago

இன்று கூடுகிறது சட்டப்பேரவை… கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி ஒரு தனித்தீர்மானம்!

சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…

3 hours ago

லக்னோ படு தோல்வி..பார்முக்கு எப்போ வருவீங்க ரூ.27 கோடி ரிஷப் பண்ட்?

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…

3 hours ago