பணிக்காலத்தின் கடைசி நாள்.! அலுவலகத்தில் உறங்கி சென்ற ஐபிஎஸ் அதிகாரி.!

35 ஆண்டுகளாக கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த ஜாகோப் தாமஸ், கடைசி பணி நாளில் தனது அலுவலக அறையில் படுத்துறங்கியுள்ளார்.
கேரளாவில் கடந்த 35 ஆண்டுகளாக ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த ஜாகோப் தாமஸ் அவர்கள் நேற்று முன்தினத்துடன் தனது கடைசி பணிக்காலத்தை நிறைவுசெய்துள்ளார். இவர் கடந்த 1985-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ஜை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார்.
கேரளாவில் லஞ்ச ஒழிப்புத்துறை, தீயணைப்பு துறை என பல்வேறு துறைகளில் பணியாற்றி அவர் கடைசியாக அரசின் உலோக கருவிகள் தயாரிப்பு பொதுத்துறை நிறுவனமான மெட்டல் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குனராக பதவியில் இருந்து வந்துள்ளார். ஜாகோப் தாமஸ் நேற்று முந்தினத்துடன் ஓய்வு பெற்றார்.
இது குறித்து, அவர் தனது இணையதள பக்கத்தில் பதிவிடுகையில், ‘ இதுவே எனது கடைசி பணி நாள். நான் எனது அலுவலகத்தில் உறங்குகிறேன்’ எனவும், எனது வாழ்வின் அடுத்த அத்தியாயத்தை பரசுராமரின் கோடரியால் தொடங்க உள்ளேன்.’ எனவும் பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025