முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக பாபனிபூர் இடைத்தேர்தலில் தான் போட்டியிவது,மேற்கு வங்காள மக்களின் நீதிக்கான போராட்டம் என்று மேற்கு வங்க பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரிவால் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் பாபனிபூர், ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,மேற்குவங்க பவானிப்பூர் இடைத்தேர்தலில் போட்டியிட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி செப்டம்பர் 10 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியுற்ற மம்தா பானெர்ஜி பாபனிபூரில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில்,பாபனிபூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிடும் பாஜகவின் பிரியங்கா திப்ரிவால் இன்று வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்.
இதனையடுத்து,ஏஎன்ஐ செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
“இது அநீதிக்கு எதிரான போராட்டம். இது மேற்கு வங்க மக்களின் நீதிக்கான போராட்டம் ஆகும். பாபனிபூரின் மக்கள் அவர்கள் ஒரு பெரிய வாய்ப்பைப் பெற்றுள்ளனர், அவர்கள் முன்னோக்கி வந்து வரலாற்றை உருவாக்க வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…