இந்தியா கூட்டணியின் பிரதமர் யார் எனக்கூற 48 மணிநேரம் கூட ஆகாது.! ஜெய்ராம் ரமேஷ் பேட்டி.!

Published by
மணிகண்டன்

காங்கிரஸ்: தேர்தல் வெற்றிக்கு பின்னர் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க 48 மணிநேரம் கூட ஆகாது – காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ்.

மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. நாளை மறுநாள் (ஜூன் 1) உடன் தேர்தல் நிறைவடைய உள்ளது. இதில், NDA கூட்டணியில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் வேட்பாளர் யார் என கூட்ட்டணிக்குள் முடிவு எட்டப்படவில்லை. இது குறித்து இன்று PTI செய்தி நிறுவனத்திற்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் பேட்டி அளித்து இருந்தார் அதில் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார்.

ஜெய்ராம் ரமேஷ் பேட்டியில் குறிப்பிடுகையில், மக்களவை தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களுக்கு மேல் I.N.D.I.A கூட்டணிக்கு இடங்கள் கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது. I.N.D.I.A கட்சிகள் ஆட்சிக்கு வரும்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட எங்கள் கூட்டணியில்  சேரலாம். தேர்தல் முடிவுக்கு பின்னர்  I.N.D.I.A கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று தேர்வு செய்ய 48 மணிநேரம் கூடா ஆகாது என்று குறிப்பிட்டார்.

தேர்தலுக்கு பிறகு NDA கூட்டணிக் கட்சிகளான JD(U) நிதிஷ் குமார் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு போன்றவர்களுக்கு கூட கதவுகள் திறந்தே இருக்குமா என்று கேள்விக்கு நிதீஷ் குமார் பல்டி அடிப்பதில் மன்னர். கட்சி விட்டு கட்சி தாவுவதில் கைதேர்ந்தவர். சந்திரபாபு நாயுடு 2019இல் காங்கிரஸுடன் தான் கூட்டணியில் இருந்தார். இந்த கூட்டணி விவகாரங்கள் குறித்து மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி என கட்சி தலைவர்கள் குழு முடிவு செய்யும் என குறிப்பிட்ட்டார். நேர்மை மற்றும் மனிதநேயம் ஆகியவற்றைக் கொண்ட கூட்டணி I.N.D.I.A கூட்டணி. ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பழிவாங்கும் அரசியல் நோக்குடன் இருக்கிறது என கூறினார்.

செப்டம்பர் 7, 2022 அன்று ராகுல் காந்தி பாரத ஒற்றுமை யாத்திரையைத் தொடங்கிய அதே விவேகானந்தர் நினைவிடத்தில், பிரதமர் மோடி இரண்டு நாட்கள் தியானம் செய்யபோகிறார். ஜூன் 4 தேர்தல் முடிவுக்கு பின் ஓய்வு வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தியானிக்க உள்ளார் பிரதமர் மோடி என்றும் ,

எங்களுக்கு வெற்றிபெற்ற சீட் எண்ணிக்கையில் உள்ளே வர விரும்பவில்லை, ஆனால், நான் சொல்வது எல்லாம் I.N.D.I.A கூட்டணி பெரும்பான்மை வெற்றியை பெறுவோம் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் PTI செய்தி நிறுவனத்துடனான பேட்டியில் குறிப்பிட்டார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

GT vs MI : மாஸ் காட்டுவாரா ரோஹித்? டாஸ் வென்ற பாண்டியா பந்துவீச முடிவு.!

அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…

24 minutes ago

தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?

அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட  X-ஐ, தனது சொந்த…

27 minutes ago

ஜிவி – அனி சம்பவம்.., ஆட்டம் போட வைக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் சிங்கிள்.!

சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…

1 hour ago

சினிமா சான்ஸ்… எங்கள் பெயரை சொல்லி மோசடி.! கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.!

சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…

2 hours ago

உசிலம்பட்டி காவலர் கொலை வழக்கு : கஞ்சா வியாபாரி என்கவுண்டர்.!

மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…

2 hours ago

தோனியின் கண் முன்னே… கலீல் அகமதுவை தள்ளிவிட்ட விராட் கோலி.! வைரல் வீடியோ…

சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…

3 hours ago