கொரோனாவை தடுக்க மேலும் 3 வாரங்கள் தேவை .! மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்.!

இந்தியாவில் கொரோனாவால் 6412 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சற்று நேரத்திற்கு முன் பேட்டியளித்தார்.அப்போது , கொரோனாவில் இருந்து மீள மேலும் மூன்று வாரம் தேவை. இந்தியாவில் கொரோனா பரவலை தடுப்பதில் பெரும் சவாலாக உள்ளது. மூன்று வாரம் வீட்டில் இருப்பது அவசியம் என தெரிவித்துள்ளார்.
கொரோனாவை ஒழிப்பதில் மத்திய , மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் . பல மாநிலங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநிலங்கள் 100 சதவீத ஊரடங்கு கடுமையாக பின்பற்றினால் மட்டும் கொரோனா பரவலை தடுக்க முடியும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.
பல மாநிலங்களில் மேலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள நிலையில் நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025