இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வர ஒன்றரை ஆண்டுகள் ஆகலாம் – சௌமியா சுவாமிநாதன்.!

Published by
Ragi

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்ட பின்னர் அவை சந்தைக்கு வர கிட்டத்தட்ட 1.5 ஆண்டுகள் ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியான சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் வெவ்வேறு கட்ட பரிசோதனையில் 3 தடுப்பூசிகள் உள்ளது. சமீபத்தில் மோடி அவர்கள் ஆராய்ச்சியாளர்கள் பச்சை கொடி காண்பித்து அனுமதி அளித்ததும் நாடு முழுவதும் கொரோனாவுக்கான தடுப்பூசிகள் மிகப் பெரிய அளவில் தயாரிக்கப்படும் என்றும், தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்ட உடன் இந்திய அளவில் கொரோனா தடுப்பூசியை மிக குறைந்த நேரத்தில் விநியோகம் செய்வதற்கான அரசாங்கத்தின் சாலை வரைபடம் தயாராக உள்ளதாகவும் கூறினார்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்ட பிறகு அவை சந்தைக்கு வருவதற்கு கிட்டதட்ட ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானிகளில் ஒருவரான சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். பொதுவாக சந்தைக்கு ஒரு தடுப்பூசி வர 5 முதல் 10 ஆண்டுகள் வரை ஆகும். ஆனால் கொரோனாவுக்கான தடுப்பூசிகள் உலக சுகாதார அமைப்பின் உதவியுடன் செயல்பட்டு வருவதால் அதனை விரைவுபடுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசிகள் விரைவில் அதற்கான தயாரிப்பு பணிகளை முடித்தாலும், அதனை சோதனை செய்வதற்கு வெகு நேரம் எடுக்கும் என்றும், எனவே கொரோனா தடுப்பூசிகள் சந்தைக்கு வர கிட்டத்தட்ட ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை ஆகலாம் என்று சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

Published by
Ragi

Recent Posts

விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு.!

விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு.!

விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…

35 minutes ago

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…

8 hours ago

சாட்ஜிபிடியை ஓரம் கட்ட ஸ்கெட்ச் போட்ட மார்க் ஜுக்கர்பெர்க்! போட்டியில் களமிறங்கிய Meta AI ஆப்!

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…

9 hours ago

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

10 hours ago

“200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்” தமிழிசைக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…

11 hours ago

என்னுடைய மனைவி தான் தூண்…பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் எமோஷனல்!

டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

12 hours ago