சிறுவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட ரூ.960 கோடி – நடிகர் சோனு சூட்டுடையதா?

Published by
Edison

பீகார்,சிறுவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட ரூ.960 கோடி தொகை நடிகர் சோனு சூட்டுடையதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பீகார்,கதிஹார் மாவட்டத்தில் உள்ள பாகுரா பஞ்சாயத்தில் உள்ள பஸ்தியா கிராமத்தில் வசிக்கும் குருசந்திர விஸ்வாஸ் மற்றும் அசித் குமார் ஆகிய சிறுவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட தொகை ரூ. 900 கோடிக்கு மேல் இருக்கும் என்று முன்னதாக லைவ்ஹிந்துஸ்தான் தெரிவித்தது.

அதன்படி,செப்டம்பர் 15 அன்று இரண்டு சிறுவர்களும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் (SBI) உள்ளூர் மையப்படுத்தப்பட்ட செயலாக்க மையத்திற்கு (CPC) சென்று, அரசு சீருடைகளுக்காக மாநில அரசால் டெபாசிட் செய்யப்பட்ட தொகையைப் பற்றி அறிந்து கொள்ள முயன்றபோது,தங்களது வங்கிக் கணக்கில் பெரும் தொகை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சிறுவர்கள் உத்தர பீகார் கிராமின் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார்கள்.விஸ்வாஸின் கணக்கில் ரூ. 60 கோடியும், ​​குமாரின் கணக்கில் திடீரென ரூ. 900 கோடியும் இருந்தது என்று லைவ்ஹிந்துஸ்தான் தெரிவித்தது.

இதனையடுத்து,கிளை மேலாளர் மனோஜ் குப்தா இந்த விவகாரத்தை அறிந்து ஆச்சரியப்பட்டு பணம் எடுப்பதை நிறுத்தினார்.அதன்பின்னர்,ஒரு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதே நேரத்தில்,மும்பையில் உள்ள நடிகர் சோனு சூட்டின் வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்நிலையில்,சிறுவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை நடிகர் சோனு சூட்டுடையதாக இருக்கலாம் என்ற மும்பை போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.காரணம்,சிறுவர்களின் வங்கி கணக்குக்கு ஸ்பைஸ் மனி நிறுவனத்தில் இருந்து பணம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏனெனில்,நடிகர் சோனு சூட் இந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக உள்ளார்.இந்த நிறுவனத்தில் சோனு சூட்டுக்கு பெரிய பங்கு உள்ளது. எனினும்,சிறுவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட இந்தப் பணம் நடிகர் சோனு சூட் தொடர்புடையது என்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.இதனைத் தொடர்ந்து,இரு மாணவர்களின் கணக்குகளில் இந்த திடீர் பரிவர்த்தனையில்,வங்கி மேலாளர் எம்.கே.மதுக்கரால் கொடுத்த புகாரின் அடிப்படியில் சைபர் கிரைம் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து,இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மும்பை மாவட்ட நீதிபதி உதயன் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…

9 hours ago

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி… தவெக தலைவர் விஜய் பங்கேற்பு.!

சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…

10 hours ago

நம்மகிட்ட பட்ஜெட் கொடுத்தா லாபம் தாறுமாறா இருக்கும்…கெத்துக்கட்டும் ‘டிராகன்’ அஷ்வத்!

சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…

11 hours ago

IND vs AUS : சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி போட்டி… வானிலை, பிட்ச் நிலவரம்.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…

12 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! கேப்டன் பொறுப்பை தூக்கி ரஹானேயிடம் கொடுத்த கொல்கத்தா!

கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…

12 hours ago

நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…

14 hours ago