முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு..!

Published by
Rebekal

மகாராஷ்டிரா மாநிலத்தில் இனி முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதன் பின் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து, கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து முதல் அலை, இரண்டாம் மற்றும் மூன்றாம் அலை என ஒவ்வொரு மாநிலங்களிலும் வெவ்வேறு விதமாக பரவி வந்தது.

இதனால் மத்திய அரசு கொரோனா பரவலுக்கு ஏற்ப ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் கடுமையாக்கி இருந்தது. மேலும் மக்கள் வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்பொழுது கொரோனா பாதிப்பு பல பகுதிகளில் வெகுவாக குறைந்து வருகிறது. நேற்றுடன் கொரோனா பரவல் ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளும் நிறைவடைந்து விட்டது.

இது குறித்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் நடத்திய அமைச்சரவை கூட்டத்தில், கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, நாளை முதல் மகாராஷ்டிரா மாநிலத்தில் முகக்கவசம் அணிவது அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்து பேசிய முதல்வர் உத்தவ், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொடிய வைரஸை வெற்றிகரமாக எதிர்த்து போராடி வருகிறோம். இன்று அந்த துயரம் மறைந்து வருவதாக தெரிகிறது. எனவே அனைத்து செயல்பாடுகளும் கொரோனா ஊரடங்குக்கு முன்பு இருந்ததுபோல இயங்கலாம், மக்கள் அவரவர் விருப்பத்தின் பேரில் முகக்கவசம் அணிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Recent Posts

Live : திமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் முதல்.., சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி வரை…

Live : திமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் முதல்.., சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி வரை…

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள்  கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நாளை…

29 minutes ago

பாஜக-வுக்கு செயல்படும் காங்கிரஸ் நிர்வாகிகள்! “விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்” – ராகுல் காந்தி பளிச்.!

குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…

14 hours ago

IND vs NZ : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி.. யாருக்கு சாதகம்? பிட்ச் & வானிலை ரிப்போர்ட்.!

துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…

15 hours ago

ஐயோ போச்சா!! தொடரும் தவெக போஸ்டர் பிழைகள்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!

சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…

16 hours ago

தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்ட தவெக தொண்டர்கள் – விஜய் கடும் கண்டனம்.!

சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…

18 hours ago

‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! சிறப்பு என்ன?

சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…

18 hours ago