இந்தியா அரசியல் அமைப்பில் 'இதை' காப்பற்றுவது கடினம்! – மதுரையில் திருமாவளவன் கருத்து!

நேற்றைய தினம் மகாராஷ்டிரா தலைநகரான மும்பையில் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளின் கூட்டணி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டம் நடைபெற்ற பிறகு சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருக்க வேண்டும் எனவும் அவரே கூட்டணி கட்சியின் தலைவராகவே இருக்க வேண்டும் என கூட்டத்தில் பேசியதாக செய்தி வெளியானது.
சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதிவியேற்பார் என எதிர்ப்பார்த்த இருந்த நிலையில் திடீர் மாற்றமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பாஜக-வுடன் கூட்டணியில் இணைந்ததை தொடர்து இன்று காலை மஹாராஷ்டிரா ஆளுநர் முன்பு மஹாராஷ்ட்ராவின் முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இதை தொடர்ந்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்; மஹாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி அதிர்ச்சியை அளிக்கிறது. மதச்சார்பின்மையை காப்பாற்றுவது இந்தியா அரசியல் அமைப்பியல் கடினமானது என்று மகாராஷ்டிரா காட்டியுள்ளது.
ஜனநாயக நம்பகத்தன்மையை மகாராஷ்டிரா அரசியல் கேள்விக்குறியாக்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் முதல்… அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் வரை.!
March 19, 2025
“நான் பாத்துக்குறேன் பங்கு”..மும்பை கேப்டனாகும் சூரியகுமார் யாதவ்! பாண்டியாவுக்கு BCCI செக்?
March 19, 2025