Categories: இந்தியா

மணிப்பூரில் அமைதி திரும்பி விட்டது என்று கூறுவது பொய்..! கனிமொழி எம்.பி பேட்டி..!

Published by
செந்தில்குமார்

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக இரு பிரிவினர்கள் இடையே வன்முறை வெடித்து, 100க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்தனர். மேலும், இரண்டு பெண்களை ஒரு கொடூர கும்பல் நிர்வாணப்படுத்தி, சாலையில் அழைத்துச்சென்ற வீடியோவும் வெளியாகி, உலகெங்கிலும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதனால், மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினர்கள் இடையே ஏற்பட்ட கலவரம் தொடர்பாக அங்குள்ள மக்களை நேரில் சந்திக்க காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட இந்தியா (I.N.D.I.A.) கூட்டணி கட்சி தலைவர்கள் இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்றுள்ளனர்.

அங்கு நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களின் நிலை குறித்து கேட்டறிந்தறிந்தனர். இன்று இரண்டாவது நாளான மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உகேவை நேரில் சென்று சந்தித்து, மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மீண்டும் டெல்லி வந்தடைந்துள்ளனர்.

இதன்பிறகு, திமுக எம்.பி.கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், இரண்டு சமூகத்தினருக்கும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை. முதலமைச்சரோ அமைச்சர்களோ மக்களை சென்று சந்திக்காத ஒரு சூழ்நிலையில், பல இடங்களில் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட அந்த இரண்டு பெண்களையும் பெண் எம்பிக்கள் மட்டுமே சந்தித்தனர். அவர்கள் மனரீதியாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பெண்களும் தங்களுக்கு நியாயம் நீதி கிடைக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் மிகவும் வருத்தப்படக்கூடிய விஷயம் எங்களை காப்பாற்ற வேண்டிய காவல்துறையே எங்களை கொண்டு போய் அந்த வன்முறை கும்பலிடம் ஒப்படைத்தது என வருத்தத்துடன் தெரிவித்தனர். தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என மணிப்பூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அங்கு அமைதி இருப்பது போல ஒரு சூழல் நிலவுகிறதே தவிர உண்மையில் அமைதி திரும்பவில்லை. பாதுகாப்பு வேண்டுமென்று மணிப்பூர் மக்கள் இன்றும் போராடி வருகின்றனர். எனவே, இதனால் நிச்சயமாக அங்கு அமைதி திரும்பி விட்டது என்று கூறுவது பொய் என திமுக எம்.பி.கனிமொழி கூறினார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

29 mins ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

1 hour ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

2 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

2 hours ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

3 hours ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

3 hours ago