PM Modi - Chandrababu Naidu - Nitish Kumar [File Image]
டெல்லி: உள்துறை, நிதித்துறை, பாதுகாப்புத்துறை போன்ற முக்கிய துறைகளை தன்வசம் வைத்துக்கொள்ள பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தல் முடிந்து பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. பிரதமர் மோடி நாளை மாலை 7 மணி அளவில் இந்தியவின் பிரதமராக 3வது முறையாக பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், நாளை முக்கிய துறைகளுக்கான அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.
இப்படியான சூழலில், NDA கூட்டணியில் முக்கிய கட்சிகளாக இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆகியவை முக்கிய துறைகளை கேட்பதாகவும் அவ்வப்போது உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனை தொடர்ந்து தபோது தனியார் செய்தி நிறுவனத்தில் வெளியான தகவலின்படி, NDA கூட்டணியில் தலைமை வகிக்கும் பாஜக, உள்துறை, நிதித்துறை, பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை, ரயில்வேத் துறை, சாலைப் போக்குவரத்து, சட்டத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, கல்வித்துறை ஆகிய 9 துறைகளை தன்வசப்படுத்த வாய்ப்புள்ளது என்றும்,
கூட்டணி கட்சிகள் அமைச்சர்களாக, துணை அமைச்சர்களாக கிட்டத்தட்ட 12 முதல் 15 பதவிகளை பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. பீகார் பாஜக மற்றும் நிதிஷ்குமாரின் JDU கட்சிகளுக்கு சம எண்ணிக்கையில் அமைச்சரவை பொறுப்புகள் கிடைக்கும் என்றும், சந்திரபாபு நாயுடுவின் TDP கட்சிக்கு 3 அமைச்சரவை பொறுப்புகள் கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
புதியதாக அமையவுள்ள 18வது அமைச்சரவையில் யார் யார் எந்த இடம்பெற்றுள்ளனர், எந்த கட்சிகளுக்கு எந்தெந்த துறைகள் என்ற விவரம் நாளை மாலை அதிகாரபூர்வமாக கிடைக்கப்பெறும் என்று அறியப்படுகிறது.
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…
அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ, தனது சொந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…