திறக்கப்படும் ஐய்யனின் நடை..!கட்டுப்பாடுகளுடன் நிர்வாகம் அறிவிப்பு

Default Image

சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை மாதாந்திர பூஜைக்காக வரும்16ந்தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியான தகவல் படி:சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அக்.,16ந்தேதி திறக்கப்படுவதாகவும்.அன்றைய தினம் எவ்வித பூஜையும் நடக்காது என்றும் தெரிவித்துள்ள தேவஸ்தானம் அக்,.17ந்தேதி முதல் அக்,.22ந்தேதி வரை 5நாட்கள் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடும் கட்டுப்பாடுகளோடு தினந்தோறும் 250 பக்தர்களுக்கு சுவாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள தேவஸ்தானம் சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழையும்
உடன் கொண்டு வரவும் கட்டாயமாக முக கவசம் அணிந்து வரவும்,தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.


	

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்