ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும்,120 க்கும் மேற்பட்டவர்களை அழைத்துக் கொண்டு புறப்பட்ட ராணுவ விமானம்..!

Published by
Edison

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகள் உள்பட மொத்தம் 120க்கும் மேற்பட்ட இந்தியர்களுடன் இந்திய ராணுவ விமானம் டெல்லி புறப்பட்டது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில மாதங்களாக அரசு படைகளுக்கும், தாலிபான் படைகளுக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது. இதனையடுத்து,ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, ஆட்சி அதிகாரத்தையம்  கைப்பற்றினார்கள்.இதனால்,பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள்,அதிகாரிகள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புகின்றனர்.

அந்த வகையில், ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்று முன்தினம் இந்தியர்கள் 129 பேர் இந்தியா திரும்பிய நிலையில் மீண்டும் ஒரு ஏர் இந்தியா விமானம் ஆப்கான் தலைநகர் காபூல் செல்ல இருந்தது.

ஆனால்,ஆப்கான் மக்கள் உள்பட பலர் அதிக அளவில் ஒரே நேரத்தில் விமான நிலையத்தில் கூடியதால் விமான சேவை ரத்து செய்யப்பட்டு, விமான நிலையம் மூடப்பட்டது.இதற்கிடையில்,கூட்டத்தை கட்டுப்படுத்த அமெரிக்க படையினரால் காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.இதில் சிலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியது.இதனால்,அங்கு செல்ல இருந்த 2 விமானங்களையும் ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்தது.

இதனையடுத்து,தாலிபான்கள் வசம் உள்ள ஆப்கானிஸ்தானில் சிக்கிய இந்தியர்களை மீட்க இந்திய ராணுவ விமானம் புறப்பட்டு அங்கு சென்றது.

இந்நிலையில்,இந்திய விமானப்படையின் சி -17 விமானம் இந்திய அதிகாரிகள் உள்பட 120க்கும் மேற்பட்ட இந்தியர்களுடன் காபூலில் இருந்து இன்று புறப்பட்டுள்ளது.இதற்கிடையில்,ஆப்கானிலிருந்து இந்தியா வருவதற்கு e- emergency X misc விசா முறையில் உடனடி விசா பெற்று கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Published by
Edison

Recent Posts

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…

49 minutes ago

நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!

நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

2 hours ago

மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…

3 hours ago

“விஜய்யிடமிருந்து முஸ்லிம்கள் தள்ளி இருங்கள்” – அகில இந்திய முஸ்லிம் ஜமாத்.!

சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…

4 hours ago

அதிரடி காட்டுமா ராஜஸ்தான்.? பேட்டிங் செய்ய களமிறங்கும் டெல்லி.! பிளேயிங் லெவன் இதோ…

டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…

5 hours ago

“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!

சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…

6 hours ago