நாளை அதாவது ஜனவரி 1 ஆம் தேதி 2024 ஆம் ஆண்டின் முதல் நாளாகும். இதன் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆண்டின் முதல் நாளிலேயே பிஎஸ்எல்வி சி-58 என்ற ராக்கெட் விண்ணில் செலுத்துகிறது. அந்த வகையில் நாளை பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் மூலம் “எக்ஸ்போசாட்” என்ற செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. கேரளா பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட வெசாட்செயற்கைகக்கோளும் ஏவப்படுகிறது.
இந்த செயற்கைகோள் விண்வெளியில் உள்ள கருந்துளைகள் மற்றும் நியூட்ரான் நட்சத்திரங்களை குறித்து ஆய்வு செய்ய உள்ளது. நாளை (திங்கட்கிழமை) பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் ஏவுவதற்கு அனைத்தும் தயாராக உள்ளது. இதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் ஞாயிற்றுக்கிழமை (இன்று ) காலை 8.10 மணிக்கு தொடங்கியது. நாளை காலை 9.10 மணிக்கு பிஎஸ்எல்வி சி-58 விண்ணில் ஏவப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படுகிறது.
புவியின் மேற்பரப்பில் இருந்து 650 கிமீ உயரத்தில் உள்ள வட்டப்பாதையில் செயற்கைகோள்களை அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் இரண்டு முக்கிய பேலோடுகளைக் கொண்டிருக்கும். ஒன்று பெங்களூருவை தளமாகக் கொண்ட ராமன் ஆராய்ச்சி நிறுவனம் (RRI) மற்றும் மற்றொன்று ISROவின் U R ராவ் செயற்கைக்கோள் மையம் (URSC), ISRO ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…