தவறாக குற்றம் சுமத்தப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ. 1.30 கோடி இழப்பீடு.!

Published by
Ragi

தவறாக குற்றம் சுமத்தப்பட்ட நம்பி நாராயணனுக்கு 1.30கோடி ரூபாய் இழப்பீடை கேரள அரசு வழங்கியுள்ளது.

இஸ்ரோவின் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றியவர் நம்பி நாராயணன். இவர் கடந்த 1994-ம் ஆண்டு இஸ்ரோவின் சில முக்கிய தகவல்களை இரண்டு மாலத்தீவு உளவுத்துறை அதிகாரிகளுக்கு விற்றதாகவும், அவர்களுக்காக உளவு  பார்த்ததாகவும் கூறி 2019-ம் ஆண்டு டிசம்பரில் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதனையடுத்து நடந்த சிபிஐ விசாரணையில் அவர் குற்றமற்றவர் என்று தெரிய வந்தது. அதனை தொடர்ந்து நம்பி நாராயணன் தன்னை தேவையில்லாமல் கைது செய்து துன்புறுத்தியதாகவும், மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காகவும் கேரள அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டது.

அந்த வகையில் சிறப்பு அதிகாரியை நியமித்து, அவர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் கேரள அரசு நம்பி நாராயணனுக்கு ரூ. 1.3கோடி இழப்பீடு வழங்க முடிவு செய்தது. அதன்படி தற்போது சிறப்பு அதிகாரி அளித்த சிபாரிசின் பேரில் கேரள அரசு தவறாக குற்றம் சுமத்தப்பட்ட நம்பி நாராயணனுக்கு 1.30கோடி ரூபாய் இழப்பீடு தொகை வழங்கியுள்ளது.

ஏற்கனவே கடந்தாண்டு கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கேரள அரசு ரூ. 50 லட்சம் இழப்பீடை நம்பி நாராயணனுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

3 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

3 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

3 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

3 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

3 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

3 hours ago