நிலவிற்கு செல்ல புதிய திட்டம்!இஸ்ரோவின் அடுத்த மைல்கள்….

Published by
Venu

இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ள கருத்தில்  சந்திராயன் 2 திட்டத்தின் மூலம் நிலவில் தரையிறக்கப்படும் ஆய்வூர்தி, முதல் கட்டத்தில் 14 நாட்களுக்கு ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். முதன் முதலில் நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன்1 விண்கலம் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. ஆனால், சந்திராயன்2 திட்டத்தைப் பொறுத்தவரை, விண்கலம், ஆய்வூர்தி மற்றும் ஆய்வூர்தியை இறக்குவதற்கான லேண்டர் ஆகிய மூன்றும் முதன்முறையாக அனுப்பப்பட உள்ளன.

இவற்றின் மொத்த எடை 3 ஆயிரத்து 290 கிலோ என்பதால் ஜிஎஸ்எல்வி மார்க்2 ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சந்திராயன் 2 திட்டம் வரும் ஏப்ரலில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நிலவின் சுற்றுவட்டப்பாதை, பூமியின் பரப்பில் இருந்து 3 லட்சத்து 82 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

ஏப்ரலில் ஏவப்பட்ட பின்னர் நிலவின் திட்டமிட்ட சுற்றுவட்டப்பாதைக்கு சந்திராயன் 2 விண்கலம் செல்ல இரண்டு மாதங்கள் வரை ஆகும். நிலவின் திட்டமிட்ட சுற்றுவட்டப்பாதையில் விண்கலம் நுழைந்தவுடன் அதிலிருந்து லேண்டர் கருவி பிரிந்து நிலவின் தென்துருவத்தில் இறங்கும்.

பின்னர் லேண்டரில் இருந்து 6 சக்கரங்கள் கொண்ட ஆய்வூர்தி பிரிந்து நிலவின் பரப்பில் 150 முதல் 200 மீட்டர் வரை செல்லும். 14 நாட்களுக்கு நிலவின் பரப்பு குறித்து வேதியியல் பகுப்பாய்வு உள்ளிட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும். இந்த ஆய்வுகள் குறித்த தகவல்களை 15 நிமிடங்களுக்குள் நிலவின் சுற்றுப்பாதையில் உள்ள விண்கலத்தின் மூலம் பூமிக்கு ஆய்வூர்தி அனுப்பும்.

14 நாட்கள் கழித்து ஸ்லீப் மோட் எனும் செயலற்ற நிலைக்கு ஆய்வூர்தி சென்றுவிடும். அதன் பிறகு, சூரிய ஒளி மூலம் ரோவரின் பேட்டரிகள் மின்னேற்றம் பெற்றால் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என சிவன் தெரிவித்துள்ளார்.

சந்திராயன் 2 திட்டத்தின் விண்கலம், லேண்டர், ஆய்வூர்தி மூன்றும் தயாராகிவிட்டது என்றும், அவற்றை ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், ஒருங்கிணைப்புக்குப் பிறகு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும் சிவன் விளக்கம் அளித்துள்ளார். சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படும் தேதி, பூமியிலிருந்து ஒப்பிடும்போது நிலவு எந்த நிலையில் இருக்கும் என்பன உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் எனவும் இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

7 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

9 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

9 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

9 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

9 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

10 hours ago