நிபா வைரஸ் தொற்று காரணமாக கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் 68 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கேரளாவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிபா வைரஸ் தொற்று தற்போது மீண்டும் அங்கு பரவியுள்ளது. இந்த தொற்றால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 12 வயதுடைய சிறுவன் உயிரிழந்தான். கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த இந்த சிறுவன் நிபாவால் உயிரிழந்ததை தொடர்ந்து இவனுடைய தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை எடுக்கப்பட்டு புனேவில் உள்ள கிருமியியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், நிபா வைரஸ் தொற்று தனிமைப்படுத்துதல் பிரிவில் கோழிக்கோட்டை சேர்ந்த 68 பேர் அரசு மருத்துவ கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது நலத்துடன் உள்ளனர்.
நேற்று புனே ஆய்வகம் அனுப்பியுள்ள தகவல் படி, 10 பேருக்கு தொற்றில்லை என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மேலும் 20 பேரின் மாதிரிகளும் நெகடிவ் ஆக வந்துள்ளது. தற்போது 21 பேரின் தொற்று முடிவு இன்னும் வெளிவராமல் உள்ளது. இதற்காக காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாட உள்ளன. இந்த…
சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…
டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை…