கொரோனா பரவல் அதிகரிக்கும் நேரங்களில் மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டு இருங்கள் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், கேரளாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. கேரளாவில் ஒரே நாளில் 38 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. எனவே, கேரளாவில் மே 4 முதல் 9ஆம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தேர்தல் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளார். மேலும், மக்கள் கொரோனா தொற்று அதிகரிக்கும் காலங்களில் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பது சிறந்தது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் புதியதாக கேரளாவில் ஆக்சிஜன் ஆலை அமைக்கக் கூடிய பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். சந்தைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வரக்கூடிய மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள இரட்டை முக கவசம் அணியுமாறும் தெரிவித்துள்ளார்.
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது…