ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் தற்போது சாத்தியமா?! உச்சநீதிமன்றத்தில் விசாரணை.!

Published by
மணிகண்டன்

ரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டிருந்தது.

கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்செரிகை நடவடிக்கையாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மத்திய அரசானது ஏற்கனவே நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை ஜூன் மாதம் முதல் அமல்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தது.

இந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை தற்போது அமல்படுத்தினால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள், வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என பல தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என கூறி, இதனால் உடனே இந்த திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ரீபக் கன்சால், சஞ்ஜய் குமார் விசன் ஆகிய வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை காணொலி மூலம் விசாரித்த நீதிபதிகள் என்.வி. ரமணா, எஸ்.கே.கவுல், பி.ஆர்.கவாய் ஆகியோர் கூறுகையில், ‘ ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு ஜூன் மாதம் அமல்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசு திட்டத்தில் நாங்கள் குறுக்கிட விரும்பவில்லை.

மேலும், தற்போதைய சூழ்நிலையில், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த முடியுமா என மத்திய அரசுதான் கலந்தாலோசிக்க வேண்டும்.’ என கூறி வழக்கை முடித்துவைக்கப்பட்டது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

4 mins ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

28 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

1 hour ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

1 hour ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

2 hours ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

2 hours ago