மனிதாபிமானம் மாண்டு போயிற்றோ? சிறுத்தையை கொன்று ஊர்வலமாக கொண்டு சென்ற மக்கள்!

Published by
லீனா

சிறுத்தையை கொன்று ஊர்வலமாக கொண்டு சென்று கொண்டாடிய கிராம மக்கள். 

சமீப காலமாக விலங்குகளுக்கு எதிராக மனிதர்கள் பல  கொடூரமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், அசாம் மாநிலத்தில், அங்கு வசிக்கும் கிராம மக்கள், சிறுத்தைகளை கொல்லுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனையடுத்து, அசாம்  மாநிலத்தில்,கடப்பாரி கிராமத்தில் வசிக்கும் கிராம மக்கள், ஒரு சிறுத்தையை கொன்று அதனை ஊர்வலமாக கொண்டு சென்று கொண்டாடியுள்ளனர். 

இவர்களது இந்த செயல் இணையத்தில் வைரலானது. இதனையடுத்து, இதுகுறித்து பேசிய வனத்துறை அதிகாரிகள், இந்த செயல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்குள் நடந்துள்ளது என்றும், பொறியில் சிக்கிய சிறுத்தை, அது தன்னை விடுவித்துக் கொள்ள சிறிது நேரம் எடுக்கும், நாங்கள் அங்கு விரைந்து செல்வதற்குள், அங்குள்ள மக்கள் அதனை கொன்று விட்டனர் என்றும் தெரிவித்துள்ளனர். 

மேலும், அவர்கள் கொன்ற சிறுத்தையின்  நகங்கள்,பற்கள், தோல்கள் அனைத்தையும் பிடுங்கி விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் 7 பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து கடப்பாரி கிராம மக்கள் கூறுகையில், அந்த சிறுத்தை சமீப காலமாக அங்குள்ள கோழி, ஆடுகளை வேட்டையாடி வாந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அசாமில், இது கொல்லப்பட்டுள்ளது 5-வது சிறுத்தை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கேரளாவில் யானைக்கு அன்னாசியில் வெடி மருந்து வைத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது சிறுத்தைக்கு நடந்துள்ள இந்த கொடுமை அசாமில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Published by
லீனா

Recent Posts

என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் – கில்!என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் – கில்!

என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் – கில்!

மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…

11 hours ago
இந்தியாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை! CDS அனில் சௌகான் பேச்சு!இந்தியாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை! CDS அனில் சௌகான் பேச்சு!

இந்தியாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை! CDS அனில் சௌகான் பேச்சு!

டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…

12 hours ago
பிரமாண்ட ரோட் ஷோ…முதலமைச்சருக்கு மதுரை மக்கள் உற்சாக வரவேற்பு!பிரமாண்ட ரோட் ஷோ…முதலமைச்சருக்கு மதுரை மக்கள் உற்சாக வரவேற்பு!

பிரமாண்ட ரோட் ஷோ…முதலமைச்சருக்கு மதுரை மக்கள் உற்சாக வரவேற்பு!

மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…

13 hours ago
வாய்ப்பை இப்படி தான் பயன்படுத்தனும்! இரட்டை சதம் விளாசி சொல்லிக்கொடுத்த கருண் நாயர்!வாய்ப்பை இப்படி தான் பயன்படுத்தனும்! இரட்டை சதம் விளாசி சொல்லிக்கொடுத்த கருண் நாயர்!

வாய்ப்பை இப்படி தான் பயன்படுத்தனும்! இரட்டை சதம் விளாசி சொல்லிக்கொடுத்த கருண் நாயர்!

கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…

13 hours ago
ராமதாஸ் ரெடியா இருக்காரு…அடுத்து அன்புமணியிடம் பேச வேண்டும் -ஜி.கே.மணி!ராமதாஸ் ரெடியா இருக்காரு…அடுத்து அன்புமணியிடம் பேச வேண்டும் -ஜி.கே.மணி!

ராமதாஸ் ரெடியா இருக்காரு…அடுத்து அன்புமணியிடம் பேச வேண்டும் -ஜி.கே.மணி!

சென்னை :  பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…

14 hours ago
நடிகர் ராஜேஷ் மறைவு…தனக்குத் தானே கட்டிய கல்லறையில் உடல் நல்லடக்கம்!நடிகர் ராஜேஷ் மறைவு…தனக்குத் தானே கட்டிய கல்லறையில் உடல் நல்லடக்கம்!

நடிகர் ராஜேஷ் மறைவு…தனக்குத் தானே கட்டிய கல்லறையில் உடல் நல்லடக்கம்!

சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…

15 hours ago