பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறதா? ஐக்கிய ஜனதா தளம்!

Default Image

பாஜக கூட்டணியில் தொடர்வதா என்பது குறித்து முடிவு எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம் முடிவு.

பாஜகவுடன் கருத்து வேறுபாடு அதிகரித்துள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம் நாளை அவரச ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. பாட்னாவில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க எம்பி, எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜகவில் இருந்து வெளியேறி ஆர்.ஜே.டியுடன் சேர்ந்து ஆட்சியில் தொடர நிதிஷ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் முதலமைச்சராக இருக்கிறார். எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கூட்டணியில் தொடர்வதா என்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. அதுமட்டுமில்லாமல், பாஜகவுடன் கருத்து வேறுபாடு காரணமாக, சமீப காலமாக பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் உள்ளிட்ட  மத்திய அரசின் பல்வேறு நிகழ்ச்சிகளை நிதிஷ் குமார் புறக்கணித்து இருந்தார்.

பீகாரில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை விட ஐக்கிய ஜனதா தளம் குறைந்த இடங்களை பிடித்து இருந்தது. இருப்பினும், கூட்டணியில் உள்ளதால் நிதிஷ் குமார் முதலமைச்சராக உள்ளார். பாஸ்வான் கட்சி உடைந்தது போல ஐக்கிய ஜனதா தளத்தை உடைக்க பாஜக முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் எந்த நேரமும் வெளியேறக்கூடும் என்று தேசிய அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்