தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து இதுவரை 63 புகார் செய்யப்பட்டும் தேர்தல் ஆணையம் மவுனம் காக்கிறது என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் தேர்தல் நடைபெற்றவுள்ளது. முதல்கட்டத் தேர்தல் 30 தொகுதிகளுக்கு கடந்த 27-ம்தேதி நடைபெற்றது. இதில், 80 சதவீத வாக்குகள் பதிவாகியது. இந்நிலையில், இன்று 30 தொகுதிகளுக்கு 2-ம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. இந்த 30 தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் உள்ளது.
இதையெடுத்து, நந்திகிராம் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியை மம்தா பானர்ஜி பார்வையிட்டார். அப்போது, உள்ளூர் மக்கள் வாக்களிக்க அனுமதி மறுக்கப்படுவதாக திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் தெரிவித்தனர். பின்னர், வாக்கு சாவடிக்கு வெளியே ஆளுநருக்கு மம்தா பானர்ஜி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இந்நிலையில், மேற்குவங்கம் நந்திகிராம் தொகுதியில் விதிமீறல்கள் பற்றி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கை இல்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து இதுவரை 63 புகார் செய்யப்பட்டும் தேர்தல் ஆணையம் மவுனம் காக்கிறது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் குண்டர்களால் மேற்குவங்கத்தில் அமைதி பாதிக்கும் அபாயம் என தெரிவித்தார்.
விதி மீறல் குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிடில் நீதிமன்றத்தை நடுவோம் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…
தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…
சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை…