மும்பையில முன் களப்பணியாளர்கள் வெளியில் பயணிக்க சிவப்பு பச்சை மஞ்சள் நிறங்களில் பாஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
மும்பையில் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு மற்றும் கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ளதால் போலீசார் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளனர். தனியார் வாகனங்களுக்கு மூன்று வண்ண குறியீடுகளின் ஸ்டிக்கர்களைக் கொண்ட வாகனங்கள் மட்டுமே சாலையில் இயக்க முடியும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவின் போது போக்குவரத்து நெரிசல் பிரச்சினை காரணமாக மும்பை காவல்துறை இந்த கடுமையான முடிவை எடுத்துள்ளது. சிவப்பு ,பச்சை, மஞ்சள் வண்ண குறியீடுகளைக் கொண்ட வாகனங்கள் மட்டுமே மும்பையில் அனுமதிக்கப்படும். இந்த மூன்று வண்ணக் குறியீடுகள் அத்தியாவசிய சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும்.
இந்த வண்ணக் குறியீடுகள் தனியார் வாகனங்களுக்கும், அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்திற்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இது அவசர சேவை வாகனங்களில் மஞ்சள் வண்ண குறியீட்டையும், மருத்துவ சேவைகளை வழங்கும் வாகனங்களில் சிவப்பு வண்ண குறியீட்டையும், காய்கறி வாகனங்களுக்கு பச்சை வண்ண குறியீட்டையும் வழங்கப்பட்டுள்ளது.
வண்ணக் குறியீட்டை தவறாகப் பயன்படுத்தினால், பிரிவு 419 மற்றும் பிற பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்த்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…
விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…