சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடையை ஆகஸ்ட் 31 நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், சர்வதேச மற்றும் உள்நாட்டு பயணிகள் விமானங்கள் கொரோனா காரணமாக தடை செய்யப்பட்டன. அதன்பிறகு, சர்வதேச விமான போக்குவரத்திற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு அதற்கக்கான கால அவகாசம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விமான போக்குவரத்து அமைச்சகம் சர்வதேச விமானங்களுக்கான தடையை நீட்டித்துள்ளது. இப்போது இந்த தடை ஆகஸ்ட் 31 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கட்டுப்பாடுகளை அதிகரிப்பதோடு, சில வழித்தடங்களில் சர்வதேச விமானங்கள் அனுமதிப்படுகிறது என்றும் சர்வதேச சரக்கு விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடந்த ஆண்டு மே 25 ஆம் தேதி இந்தியாவில் உள்நாட்டு பயணிகள் விமானங்களை மீண்டும் தொடங்கியது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 57.25 லட்சம் பேர் விமானம் மூலம் நாட்டிற்குள் பயணம் செய்தனர். மே மாதத்தில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து வீழ்ச்சியடைந்தது. கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை நாட்டையும் அதன் விமானத் துறையையும் கடுமையாக பாதித்தது.
ஜூன் மாதத்தில் சுமார் 31.13 லட்சம் உள்நாட்டு பயணிகள் விமானத்தில் பயணம் செய்தனர். இது மே மாதத்தில் பயணம் செய்த 21.15 லட்சத்தை விட 47 சதவீதம் அதிகமாகும் என சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…