டிசம்பர் 15 முதல் மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்குகிறது என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. இருப்பினும் வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக பல கட்டுப்பாடுகளுடன் இருபத்தி எட்டு நாடுகளுக்கு மட்டும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிகரீதியான சர்வதேச விமான போக்குவரத்தை இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இயக்குவது குறித்து மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, வருகிற டிசம்பர் 15 ஆம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…
சென்னை : இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள…
சென்னை : நேற்று முன்தினம் தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான முக்கிய நிகழ்வு நடைப்பெற்றது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த…
ஹைதராபாத் : நேற்று (ஏப்ரல் 12) நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…