கேரளாவில் சுவாரசிய சம்பவம்.! திருட வந்த இடத்தில் புகைப்படத்தை பார்த்து மனம் மாறிய திருடன் .!

Published by
Dinasuvadu desk
  • கேரளாவில் உள்ள திருவாங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் திருடன் இரவு  5 கடைகளில் பணம், நகைகள் கொள்ளையடித்து உள்ளான்.
  • அப்போது ஒருவீட்டில் அந்த திருடன் இது ஒரு ராணுவ வீரரின் வீடு என்று தெரியாமல் திருட நுழைந்து விட்டேன் என திருடன் சுவற்றில் எழுதி இருந்தார்.

கேரளா மாநிலம் கொச்சி அருகே உள்ள திருவாங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு  5 கடைகளில் பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருடப்பட்ட 5 கடைகளையும் ஆய்வு செய்தனர்.அப்போது ஒரு கடைக்கு அருகில் உள்ள வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை போலீசார் பார்த்தனர்.

இந்த வீட்டிலும் திருட்டு நடந்திருக்கலாம் என எண்ணி போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் வீட்டில் இருந்து ஒரு பொருள்கள் கூட திருட்டு போகவில்லை. மேலும் வீட்டின் சுவரில் திருடன் மன்னிப்பு கேட்டு எழுதி இருந்தது தெரியவந்தது.

அந்த சுவற்றில் “இது ஒரு ராணுவ வீரரின் வீடு என்று தெரியாமல் திருட நுழைந்துவிட்டேன். வீட்டில் இருந்த புகைப்படங்களை வைத்து தான் இது ராணுவ வீரரின் வீடு என எனக்கு  தெரிந்தது. தெரியாமல் பூட்டை உடைத்து உள்ளே வந்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” என சுவற்றில் எழுதி இருந்தது.

இந்நிலையில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் ஆச்சர்யத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

Published by
Dinasuvadu desk
Tags: #Keralathief

Recent Posts

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்! 

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

4 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

5 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

6 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

8 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

9 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

9 hours ago