வங்கி திவாலான 90 நாட்களுக்குள் ரூ.5 லட்சம் வரையிலான காப்பீட்டு தொகை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Default Image

முதலீட்டு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழக சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக நிதியமைச்சர் அறிவிப்பு.

வங்கிகள் கடனை காலம் தாழ்த்தி கொடுப்பதற்கான சட்ட உரிமையின் கீழ் இதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வங்கியில் பணம் செலுத்தியவர்கள், வங்கி திவாலான 90 நாட்களுக்குள் ரூ.5 லட்சம் வரையிலான காப்பீட்டு தொகை பெற முடியும் என்றும் இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும், வங்கிகளில் ஏதாவது பிரச்சினை ‍ஏற்பட்டால், கணக்குதாரர்கள் 90 நாட்களுக்குள் ரூ.5 லட்சம் வரை பெறுவதற்கு முதலீட்டு காப்பீடு கடன் உத்தரவாத கழகம் மூலம் வழிவகை செய்யப்படும் என்றும் பட்டியலிடப்பட்ட வங்கிகள், இந்தியாவில் இயங்கும் வெளிநாட்டு வங்கிகள், சிறிய கொடுப்பனவு வங்கிகள், பிராந்திய கிராப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடனில் உள்ள வங்கிகள் அனைத்துக்கும் இந்த சட்ட பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

டி.ஐ.சி.ஜி.சி (DICGC) மசோதா 2021-இன் கீழ், அனைத்து முதலீட்டுகளிலும் 98.3 சதவீதம் ஈடுசெய்யப்படும் மற்றும் முதலீட்டு மதிப்பின் அடிப்படையில், வைப்பு மதிப்பில் 50.9 சதவீதம் ஈடுசெய்யப்படும். உலகளாவிய டெபாசிட் மதிப்பு அனைத்து டெபாசிட் கணக்குகளிலும் 80 சதவீதம் மட்டுமே என கூறப்பட்டுள்ளது.

இது முதலீட்டு மதிப்பில் 20-30 சதவீதத்தை மட்டுமே உள்ளடக்கியது. சிக்கலான கடனளிப்பவர்களின் பல டெபாசிட்டர்ஸ் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை மீட்டெடுக்க நீண்ட காலமாக காத்திருப்பதால் மத்திய அமைச்சரவையில் இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
Parvesh verma - Arvind Kejriwal
Arvind Kejriwal - Atishi
L2E EMPURAAN
Arvind Kejriwal - Manish sisodia
Seethalakshmi - NOTA
Virat kohli - Harbajan singh - Shreyas Iyer