காப்பீட்டு தொகை ரூ.1 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்வு – டெபாசிட்டர்ஸ் ஃபர்ஸ்ட் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

Published by
Edison

டெல்லி:வங்கி வைப்பு தொகைகள் மீதான காப்பீட்டு தொகையை உயர்த்தும் டெபாசிட்டர்ஸ் ஃபர்ஸ்ட் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.

டெல்லி,விக்யான் பவனில் வங்கி வைப்புத் தொகைகளுக்கான காப்பீடு தொகையை உயர்த்தும் (Depositors First: Guaranteed Time-bound Deposit Insurance Payment up to Rs 5 Lakh)திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.இத்திட்டத்தின் மூலம் வங்கி வைப்பு தொகைகள் மீதான காப்பீட்டு தொகை ரூ.1 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும்,இத்திட்டத்தின் கீழ் பணத்தைத் திரும்பச் செலுத்த வங்கிகள் தவறிய டெபாசிட்தாரர்களுக்கு அடையாள காசோலைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து,பேசிய பிரதமர் கூறியதாவது:

“நான் முதலமைச்சராக இருந்தபோது,வங்கி டெபாசிட் காப்பீட்டுத் தொகையை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை.

பல ஆண்டுகளாக,இந்த பிரச்சனைகளை கம்பளத்தின் கீழ் நழுவ விடும் மனோபாவம் நம் நாட்டில் நிலவியது.ஆனால் இன்றைய புதிய இந்தியா பிரச்சனைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.அதன்படி,அவற்றைத் தீர்ப்பதில் தாமதம் இல்லாமல் பணிகள் நடைபெறுகிறது.அந்த வகையில்,தற்போது வங்கி வைப்பு தொகைகள் மீதான காப்பீட்டு தொகை ரூ.1 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,வங்கிகள் இணைப்பு பற்றி பேசிய பிரதமர், சிறிய வங்கிகளை,பெரிய வங்கிகளுடன் இணைக்கும்போது,அவற்றின் செயல்திறன் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும்,இத்திட்டம் தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில்:

“மொத்தம் 17 வங்கிகள் தங்கள் டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பிச் செலுத்தவில்லை.இந்த நிலையில்,தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் ரூ.1 லட்சம் வைப்புத்தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது.இதனால்,கிட்டத்தட்ட 98% டெபாசிட் கணக்குகள் பயனடையும்.

டெபாசிட் இன்சூரன்ஸ் கிரெடிட் திட்டத்தின் கீழ் 8-9 ஆண்டுகள் எடுக்கப்பட்ட காலம் தற்போது 90 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால்,வங்கிகள் மீது இந்தியர்கள் நம்பிக்கை வைக்க இது உதவும்”,என்று கூறினார்.

 

 

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago