காப்பீட்டு தொகை ரூ.1 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்வு – டெபாசிட்டர்ஸ் ஃபர்ஸ்ட் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

Published by
Edison

டெல்லி:வங்கி வைப்பு தொகைகள் மீதான காப்பீட்டு தொகையை உயர்த்தும் டெபாசிட்டர்ஸ் ஃபர்ஸ்ட் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.

டெல்லி,விக்யான் பவனில் வங்கி வைப்புத் தொகைகளுக்கான காப்பீடு தொகையை உயர்த்தும் (Depositors First: Guaranteed Time-bound Deposit Insurance Payment up to Rs 5 Lakh)திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.இத்திட்டத்தின் மூலம் வங்கி வைப்பு தொகைகள் மீதான காப்பீட்டு தொகை ரூ.1 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும்,இத்திட்டத்தின் கீழ் பணத்தைத் திரும்பச் செலுத்த வங்கிகள் தவறிய டெபாசிட்தாரர்களுக்கு அடையாள காசோலைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து,பேசிய பிரதமர் கூறியதாவது:

“நான் முதலமைச்சராக இருந்தபோது,வங்கி டெபாசிட் காப்பீட்டுத் தொகையை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை.

பல ஆண்டுகளாக,இந்த பிரச்சனைகளை கம்பளத்தின் கீழ் நழுவ விடும் மனோபாவம் நம் நாட்டில் நிலவியது.ஆனால் இன்றைய புதிய இந்தியா பிரச்சனைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.அதன்படி,அவற்றைத் தீர்ப்பதில் தாமதம் இல்லாமல் பணிகள் நடைபெறுகிறது.அந்த வகையில்,தற்போது வங்கி வைப்பு தொகைகள் மீதான காப்பீட்டு தொகை ரூ.1 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,வங்கிகள் இணைப்பு பற்றி பேசிய பிரதமர், சிறிய வங்கிகளை,பெரிய வங்கிகளுடன் இணைக்கும்போது,அவற்றின் செயல்திறன் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும்,இத்திட்டம் தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில்:

“மொத்தம் 17 வங்கிகள் தங்கள் டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பிச் செலுத்தவில்லை.இந்த நிலையில்,தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் ரூ.1 லட்சம் வைப்புத்தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது.இதனால்,கிட்டத்தட்ட 98% டெபாசிட் கணக்குகள் பயனடையும்.

டெபாசிட் இன்சூரன்ஸ் கிரெடிட் திட்டத்தின் கீழ் 8-9 ஆண்டுகள் எடுக்கப்பட்ட காலம் தற்போது 90 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால்,வங்கிகள் மீது இந்தியர்கள் நம்பிக்கை வைக்க இது உதவும்”,என்று கூறினார்.

 

 

Recent Posts

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…

9 hours ago

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி… தவெக தலைவர் விஜய் பங்கேற்பு.!

சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…

10 hours ago

நம்மகிட்ட பட்ஜெட் கொடுத்தா லாபம் தாறுமாறா இருக்கும்…கெத்துக்கட்டும் ‘டிராகன்’ அஷ்வத்!

சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…

11 hours ago

IND vs AUS : சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி போட்டி… வானிலை, பிட்ச் நிலவரம்.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…

12 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! கேப்டன் பொறுப்பை தூக்கி ரஹானேயிடம் கொடுத்த கொல்கத்தா!

கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…

12 hours ago

நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…

14 hours ago