தீவிரவாதிகளுக்கு பதிலாக திருமண வீட்டை தாக்கிய அரசு ! 40 பேர் உடல் சிதறி உயிரிழப்பு !

Default Image

ஆப்கானிஸ்தான் மேற்கு பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய தீவிரவாதிகளின் நடவடிக்கை அதிகளவில் இருப்பதாகவும் தற்கொலைப்படை தாக்குதல்களை அரங்கேற்றி வருவதாகவும் தகவல் அறியவந்தது. அந்த பகுதியில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் பெருமளவில் நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தெற்கு ஹெல்மன்ட் மாகாணத்திற்கு உட்பட்ட முசா காலா மாவட்டத்தில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக சிறப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு திருமண வீட்டில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 40 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். அதுமட்டுமின்றி சிலர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்