வீட்டை தீ வைத்து கொளுத்த முயன்றவர்களை தடுத்த இன்ஸ்பெக்டர் 40 சதவீத தீக்காயங்களுடன் மீட்பு!

தனது வீட்டை தீ வைத்து கொளுத்த வந்த மர்ம நபர்களை தடுக்க முயன்ற ஹைதராபாத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் 40 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள ராச்சகொண்டா எனும் இடத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் தான் பிக்ஷபதி ராவ். இவர் 40% தீக்காயங்களுடன் தற்போது மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தனது வீட்டை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்த வந்ததாகவும், அதனை தடுக்க முயன்று அவர் கதவைத் திறந்ததும் வெளியே இருந்த ஒருவர் எரிபொருள் ஒன்றை தன் மீது எறிந்ததாகவும் கூறியுள்ளார்.
அதன்பின் சில நிமிடங்களிலேயே இன்ஸ்பெக்டர் ராவ் தீப்பிடித்து எரிந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைக்க முயற்சித்தனர். இருப்பினும் 40 சதவீத தீக்காயங்களுடன் ராவ் மீட்கப்பட்டுள்ளார். தற்பொழுது இவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025