Categories: இந்தியா

INSAT-3DS : ஜிஎஸ்எல்வி எப்14 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்தியா விண்வெளி துறையில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், இஸ்ரோ அடுத்தடுத்த செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பி உலக நாடுகளின் சாதனை பட்டியலில் இடம்பிடித்து வருகிறது. அந்தவகையில், குறிப்பாக கடந்தாண்டு அனைவருக்கும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு சாதனை புரிந்தது.

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தையும், தென் துருவத்தில் தரையிறங்கிய நாடுகளில் முதல் இடத்தையும் பதிவு செய்தது. சந்திரயான் 3 வெற்றி உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது. இதையடுத்து, நிலவை அடைந்த இந்தியா, சூரியனை தொட திட்டமிட்டது. அதன்படி, ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, எல்1 புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டது.

டெல்லி விவசாயிகள் போராட்டம்.. பேச்சுவார்த்தையில் முக்கிய 3 கோரிக்கைகள்.!

இதுபோன்று, இஸ்ரோ அடுத்தடுத்த செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பி சாதனை புரிந்து வருகின்றனர். இதனிடையே வணிக ரீதியிலான செயற்கைகோள்களையும் இஸ்ரோ அனுப்பி வருகிறது. மேலும், வானியல் எச்சரிக்கை, பேரிடர் உள்ளிட்ட விண்வெளி சார்ந்த பல்வேறு விஷயங்களை குறித்து ஆய்வு செய்து முன்கூட்டியே தகவல்களை திரட்ட இஸ்ரோ பல்வேறு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.

அந்தவகையில், வானிலை மாற்றங்களை முன்கூட்டியே துல்லியமாக தெரிவிக்கக்கூடிய இன்சாட்-3டிஎஸ் (INSAT-3DS) என்ற அதிநவீன செயற்கைக்கோளை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி – எஃப்14 ராக்கெட் மூலம் இன்று மாலை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ. அதாவது, வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக இஸ்ரோ வடிவமைத்த இன்சாட் – 3டி எஸ் செயற்கைகோளுடன் ஜிஎஸ்எல்வி – எஃப்14 (GSLV-F14) ராக்கெட் இன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

இதற்கான கவுன்ட்-டவுன் நேற்று மதியம் 2.05 மணிக்கு (27.30 மணி நேரபடி) தொடங்கியது. இஸ்ரோ வடிவமைத்துள்ள இந்த அதிநவீன இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் 2,275 கிலோ எடை கொண்டது. இதில் 6 சேனல் இமேஜர் உட்பட 25 விதமான ஆய்வு கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளதாகவும், அவைகள் பூமியின் பருவநிலை மாறுபாடுகளை கண்காணித்து தகவலை வழங்கும் எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Recent Posts

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

38 mins ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

1 hour ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

2 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

2 hours ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

3 hours ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

3 hours ago