ரிசர்வ் வங்கி புதுமை மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட இன்போசிஸ் நிறுவன இணைத்தலைவர் கிரிஸ்.!

Published by
Ragi

ரிசர்வ் வங்கி புதுமை மையத்தின் தலைவராக இன்போசிஸ் நிறுவன இணைத்தலைவரான கிரிஸ் கோபால கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம், மத்திய வங்கி ரிசர்வ் வங்கி கண்டுபிடிப்பு மையத்தை அமைக்கவுள்ளதாக அறிவித்திருந்தது .இதன் மூலம் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி , நிதித்துறையில் புதுமைகளை மேம்படுத்தவும் ,புதுமையை வளர்க்கும் சூழலையும் உருவாக்க உள்ளதாக தெரிவித்தது .

இந்த நிலையில் தற்போது ரிசர்வ் வங்கியின் புதுமை மையத்தின்(innovation hub) தலைவராக கிரிஸ் கோபால கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார் .இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் இணை தலைவராக இருந்து தற்போது இணை நிறுவனராக உள்ளார் .ஸடார்ட் அப்-களுக்கான மையமான ஸ்டார்ட் அப் வில்லேஜின் தலைமை வழிக்காட்டியாகவும் உள்ளார் .ஒரு தலைவர் தலைமையிலான ஆளும் குழுவால் வழிநடத்தப்பட்டு ரிசர்வ் வங்கி நிர்வகிக்கப்படும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.மேலும் இது சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கி ,நிதி சேவைகளை மேம்படுத்தி,நிதி சேர்க்கையை ஊக்குவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரிசர்வ் வங்கியின் புதுமை மையத்தின் ஆளும் குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்கள் , மெட்ராஸ் ஐஐடி பேராசிரியரான அசோக் ஜுன்ஜுன்வாலா , பெங்களூர் ஐஐஎஸ்சி நிறுவன முதன்மை ஆராய்ச்சி விஞ்ஞானி எச்.கிருஷ்ணமூர்த்தி , கேப்பிட்டல் பண்ட்ஸ் ,டிவிஎஸ் நிறுவன தலைவரும் , நிர்வாக இயக்குநருமான கோபால் ஸ்ரீனிவாசன் , சிண்டிகேட் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் மிருத்யுஞ்சய் மஹாபத்ரா , ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குநர் டி.ரபி ஷங்கர் உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர் .

Published by
Ragi

Recent Posts

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…

33 mins ago

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

1 hour ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

3 hours ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

3 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

4 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

4 hours ago