3கோடி ரயில் பயணிகளின் தகவல் ஆன்லைனில் விற்பனை.! வெளியான அதிர்ச்சி தகவல்.!

Default Image

3 கோடி ரயில் பயணிகளின் தகவல்களை, ஹேக்கர் ஆன்லைனில் விற்பனைக்கு வைத்துள்ளார் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ரயில்வேயின் டேட்டா பேசில் ஹேக்கிங் நடைபெற்றுள்ளது, 3 கோடி பயணிகளின் தகவல்களை ஹேக்கர் ஒருவர் ஆன்லைனில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளார் என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிழல் ஹேக்கர் எனும் பெயருடைய அந்த நபர், 3 கோடி பயணிகளின் பெயர்கள், இ-மெயில், முகவரி, மொபைல் எண், உள்ளிட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஹேக்கர் வெளியிட்டுள்ள பதிவில், முக்கிய பிரபலங்கள், அரசு பணியாளர்கள் போன்றவர்களின் தகவல்கள் இருப்பதாக கூறியுள்ளார். அவர் வெளியிட்ட ஸ்கிரீன் ஷாட்டில், இந்தியன் ரயில்வேயில் பயணிகளின் பயண வரலாறும், இன்வாய்ஸ் பில்லும் பகிர்ந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்