நிதி நெருக்கடியில் தவித்து வரும் தொழில் நிறுவனங்களை மீட்க வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக நீட்டித்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என தொழில் அமைப்பு பிரதிநிதிகள் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முழுக்க கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், உலகம் முழுக்க பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் பெரும் நிதி நெருக்கடியில் தவித்து வருகின்றன.
இந்தியாவிலும் ஊரடங்கு காரணமாக பெரும்பாலான தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் இயங்காமல் இருந்து வந்தன. கடந்த 4ஆம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டன. இதனால் தற்போது தொழில்சாலைகள் குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு இயங்கி வருகின்றன.
மத்திய தொழிலாளா் துறை அமைச்சா் சந்தோஷ் கங்வாா் காணொளி காட்சி மூலம் 12 தொழில்துறை அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
ஊரடங்கு முடிந்த பிறகு தொழிற்சாலைகளை இயக்குவது தொடர்பாகவும், மேலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பாகவும் அந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தொழிலாளா் சட்டத்தில் சற்று விலக்கு அளிக்க வேண்டும் என அந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், தொழிலாளா்களுக்கு கொடுக்கப்படும் குறைந்தபட்ச ஊதியம், போனஸ் தொகை,மற்ற நிலுவைத்தொகை வழங்குவதில் எந்த மாற்றமும் இருக்காது என உறுதியளிக்கப்பட்டது. ஆனால், நிதி நெருக்கடியில் தவித்து வரும் தொழில் நிறுவனங்களை மீட்க வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக நீட்டித்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என தொழில் அமைப்பு பிரதிநிதிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், 33 சதவீதத தொழிலாளர்களுக்கு பதிலாக 50 சதவீத ஊழியா்களுடன் தொழிற்சாலைகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை வைத்தனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…