தொழில்துறை வளர்ச்சிக்கு கொள்கை சீர்திருத்தம் தேவை – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Default Image

தொழில்துறை வளர்ச்சிக்கு கொள்கை சீர்திருத்தம் தேவை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க, ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த திட்டத்தை, சுயசார்பு பாரதம் என்ற பெயரில் பல்வேறு பிரிவினரும் பலன் பலன் பெறும் வகையில்,  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார மீட்பு திட்டங்களை அறிவித்து வருகிறார். 

கடந்த மூன்று நாட்களாக இதுகுறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது நான்காவது நாளாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து, புதிய திட்டங்களை வெளியிட்டு வருகிறார். இன்றைய அறிவிப்பில், 8 துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளது. 

அவர் பேசுகையில், நாட்டில் தொழில்துறை வளர்ச்சி பெற கொள்கை சீர்திருத்தங்கள் தேவை என்றும், நிறைய துறைகளில் விதிமுறைகள், பங்களிப்புகள் எளிமையாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர் என்றும் கூறியுள்ளார். மேலும், வளர்ந்துவரும் புதிய துறைகளை ஊக்கப்படுத்தும் திட்டங்கள் இன்று அறிமுகப்படுத்த இருக்கின்றனர் என்றும், பிறநாடுகளுடன் போட்டியிட நாம் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்  என்றும் தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்