இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டங்கள்..!

Published by
Sharmi

இந்தியாவில் 75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் சுதந்திர தின நாள் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நமது நாடு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி ஒரு நாடாக 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. இதனை நாம் விடுதலை நாளாக கொண்டாடுகிறோம். இந்த நாளில் இந்தியா முழுவதும் தேசிய கோடி ஏற்றி மரியாதை செலுத்தப்படும்.

இந்திய நாட்டின் பிரதமர், தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசிய கோடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பார். இங்கு நடைபெறும் விழாவில் முப்படை அணிவகுப்பு, நடனம், நாட்டியம் போன்ற பலவகையான வண்ணமய நிகழ்ச்சிகளும் இடம்பெறும். மேலும் அன்றைய நாளில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு நினைவுகூறும் வகையில் மரியாதை செலுத்தப்படுவர். இதனை அடுத்து கடந்த ஆண்டு நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்ற வளர்ச்சியை குறித்தும், அடுத்த ஆண்டிற்கான குறிக்கோள் திட்டங்களை குறித்தும் பிரதமர் அறிவிப்பார்.

இதே போன்று ஒவ்வொரு மாநிலத்தலைநகரத்திலும் மாநிலத்தில் உள்ள முதலமைச்சர்களால் தேசிய கோடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும். இதனை அடுத்து மக்களுக்கு வாழ்த்துகளோடு நலத்திட்ட உதவிகள் போன்றவை குறித்து உரையாற்றுவர். இதேமுறையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியாளர்களும், அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகளும், கல்லூரி/ பள்ளிகளில் அதன் முதல்வர்/தலைமையாசிரியர் ஆகியோரால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்படும்.

ஒவ்வொரு வருடமும் சுதந்திர தின நாள் நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், தற்போது கொரோனா பரவல் காலம் என்பதால் விழாவை விமர்சையாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மத்திய உள்துறையிடமிருந்து அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், கொரோனா பரவல் இருக்கும் இந்த நேரத்தில் சுதந்திர தின விழா அன்று அதிகமாக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், குறைந்த எண்ணிக்கையில் கலந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மக்கள் பார்க்கக்கூடிய விதமாக சுதந்திர தின நிகழ்ச்சியை சமூக வலைத்தளத்தில்  பகிர்ந்துகொள்ளுமாறும், இந்த விழாவில் கொரோனா காலத்தில் பேருதவியாக விளங்கிய மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்கள் ஆகியோரை கவுரவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by
Sharmi

Recent Posts

“சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது”- உயர்நீதிமன்றம் உத்தரவு.!

“சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது”- உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…

28 minutes ago

ஏப்ரல் 25 மற்றும் 26இல் துணைவேந்தர்கள் மாநாடு – ஆளுநர் மாளிகை அறிக்கை.!

உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…

56 minutes ago

“சீனாக்காரங்க என்னென்னவோ கண்டுபிடிக்கிறாங்க” தங்கத்தை உருக்கி 30 நிமிடங்களில் பணமாக மாற்றும் ஏடிஎம்.!!

சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…

1 hour ago

சென்னை அவ்வளவுதான்..கோப்பை ஆர்சிபிக்கு தான்..அந்தர் பல்டி அடித்த அம்பதி ராயுடு!

சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…

1 hour ago

மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் – துணை முதல்வர் அறிவிப்பு!

சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…

3 hours ago

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்? சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு பதில்.!

சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…

3 hours ago