இந்தியாவில் ‘முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் இரயில்’- மும்பை டூ விசாகப்பட்டினம்…!

Published by
Edison

இந்தியாவின் முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் இரயிலானது ஆக்சிஜன் நிரப்ப,மும்பையிலிருந்து  விசாகப்பட்டினம் நோக்கி புறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றானது நாடு முழுவதும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.கடந்த ஒரே நாளில் 2,56,947பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.கொரோனா வைரஸினால் மிகக் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் உதவியைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால்,ஆக்சிஜன் சிலிண்டர் தேவை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.மத்திய அரசானது, ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு ஏற்பாடு செய்தாலும்,பல மாநிலங்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்று சேர்வதில் காலதாமதம் ஆகிறது.இதன் காரனமாக,மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் இரயில்வே துறையின் உதவியை நாடியுள்ளன.இந்த கோரிக்கையை ஏற்றுகொண்ட ரயில்வே துறை தனது முதல் ஆக்சிஜன் ரயில் சேவையை மும்பையில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி இயக்குகிறது.

இதைப்பற்றி மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறுகையில்,”மும்பையின் கலாம்போலி ரயில் நிலையத்திலிருந்து 7 காலி கண்டெய்னர் லாரிகள் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்டுள்ளது.விசாகப்பட்டினத்தில் ஸ்டீல் அலையில் இருந்து,இந்த 7 கண்டெய்னர் லாரிகளிலும் திரவ ஆக்சிஜன் நிரப்பப்பட்டு,ரயில் மீண்டும் மும்பை திரும்பி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலானது தனது இலக்கை அடையும் வரை இடையில் எங்கும் நிறுத்தப்படாது”,என்று கூறியுள்ளார்.

 

Published by
Edison

Recent Posts

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

3 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

7 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

8 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

8 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

8 hours ago

SLVsNZ : சாதனைப் படைத்த கமிந்து! இலங்கை சுழலில் சிக்கி திணறும் நியூசிலாந்து!

காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…

9 hours ago