புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம்.
புதிய நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவிற்கு நாட்டின் முதல் குடிமகன் என அழைக்கப்படும் குடியரசுத்தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்வீட்டில், தலித் மற்றும் பழங்குடி சமூகங்களில் இருந்து இந்திய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவது தேர்தல் காரணங்களுக்காக மட்டும் என தெரிகிறது.
புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அழைக்கப்படவில்லை. முன்னதாக புதிய நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவிற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை.
இந்தியக் குடியரசின் உச்ச சட்டமியற்றும் அமைப்பாக இந்திய நாடாளுமன்றம் உள்ளது, மேலும் இந்தியக் குடியரசுத் தலைவர் அதன் மிக உயர்ந்த அரசியலமைப்பு அதிகாரமாக இருக்கிறார். அரசாங்கம், எதிர்க்கட்சி மற்றும் ஒவ்வொரு குடிமகனையும் பிரதிநிதிப்படுத்துபவர் குடியரசுத்தலைவர் மட்டுமே.
புதிய பாராளுமன்ற கட்டிடத்தை குடியரசுத்தலைவர் திறந்து வைப்பது, ஜனநாயக அரசியலமைப்பு உரிமைக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அடையாளப்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…