இந்தியாவின் முதல் குடிமகன் பாராளுமன்ற திறப்பு விழாவிற்கு அழைக்கப்படவில்லை: கார்கே கண்டனம்.!

Mallikarjun kharge cong

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம்.

புதிய நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவிற்கு நாட்டின் முதல் குடிமகன் என அழைக்கப்படும் குடியரசுத்தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்வீட்டில், தலித் மற்றும் பழங்குடி சமூகங்களில் இருந்து இந்திய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவது தேர்தல் காரணங்களுக்காக மட்டும் என தெரிகிறது.

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அழைக்கப்படவில்லை. முன்னதாக புதிய நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவிற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை.

இந்தியக் குடியரசின் உச்ச சட்டமியற்றும் அமைப்பாக இந்திய நாடாளுமன்றம் உள்ளது, மேலும் இந்தியக் குடியரசுத் தலைவர் அதன் மிக உயர்ந்த அரசியலமைப்பு அதிகாரமாக இருக்கிறார். அரசாங்கம், எதிர்க்கட்சி மற்றும் ஒவ்வொரு குடிமகனையும் பிரதிநிதிப்படுத்துபவர் குடியரசுத்தலைவர் மட்டுமே.

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை குடியரசுத்தலைவர் திறந்து வைப்பது, ஜனநாயக அரசியலமைப்பு உரிமைக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அடையாளப்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்