பெரிய நாடுகளின் விவசாயிகளுக்கு கிடைக்கும் நவீன வசதிகள் இந்திய விவசாயிகளுக்கும் வழங்கப்பட வேண்டும், இதை இனி தாமதப்படுத்த முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் நலத்திட்ட மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றி வருகிறார்.அப்பொழுது அவர் பேசுகையில்,விவசாயிகளின் நலனுக்காக நாங்கள் கொண்டுவந்த சீர்திருத்தங்களை பார்த்து எதிர்க்கட்சிகள் கவலை அடைந்து விட்டன. யாரெல்லாம் விவசாயிகளை புறம் தள்ளினார்களோ அவர்கள் தான் தற்பொழுது இந்த மோசமான அரசியலை செய்து வருகின்றனர்.விவசாயிகளின் தற்கொலைகளை இந்த புதிய வேளாண் சட்டங்கள் தடுக்கும்.
நாங்கள் விவசாயிகளுக்கு உதவி வருகிறோம். எங்களைப் போலவே விவசாயிகளுக்கு உதவி செய்ய எதிர்க்கட்சிகளை எது தடுக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.எதிர்க்கட்சிகளால் வாக்குறுதிகளை மட்டுமே தர முடியும். ஆனால் ஆளும்கட்சி மட்டும்தான் அதை நிறைவேற்றும். இந்தியாவின் விவசாயிகள் இனி பின்தங்கிய நிலையில் வாழ முடியாது. பெரிய நாடுகளின் விவசாயிகளுக்கு கிடைக்கும் நவீன வசதிகள் இந்திய விவசாயிகளுக்கும் வழங்கப்பட வேண்டும், இதை இனி தாமதப்படுத்த முடியாது என்று பேசியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…