ஒன்றாக இணைந்து , கொரோனாவை வெல்வோம் என ட்விட்டரில் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவில் 68,35,655 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் . 58,27,704 பேர் குணமடைந்துள்ளனர்.கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 9,02,425 ஆக உள்ளது.1,05,526 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை தடுக்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.பல்வேறு விழிப்புணர்வுகள் மக்களிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பு விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் , “ஜன் அந்தோலன் ” என்ற விழிப்புணர்வை தொடங்கி வைத்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், நாம் எப்போதும் நினைவில் கொள்வோம். முககவசம் அணிய வேண்டும். கைகளை கழுவ வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். ‘6 அடி தூர இடைவெளியை’ பின்பற்ற வேண்டும் . ஒன்றாக இணைந்து, நாம் வெற்றி பெறுவோம். ஒன்றாக இணைந்து , நாம் கொரோனாவை வெல்வோம். #Unite2FightCorona என்று பதிவிட்டுள்ளார்.பிரதமரின் இந்த பதிவை தொடர்ந்து பலரும் #Unite2FightCorona என்ற ஹேஷ் டேக்கில் கொரோனாவை விரட்டுவோம் என்று தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…