44 வந்தே பாரத் விரைவு ரயில்களுக்கான டெண்டரை ரத்து செய்த இந்திய ரயில்வே .!

Published by
murugan

ரயில்களுக்கு சென்னை பெரம்பூரில் உள்ள ஐ சிஎப் ஆலை ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்கி வருகிறது. இந்நிலையில், 44 வந்தே பாரத் ரயில்களுக்கான 704 பெட்டிகளை தயாரிக்க ஐ.சி.எப், ஆலைக்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டது. அதன்படி பெட்டிக்காக சில மின் உதிரி பாகங்களை வாங்க கடந்த டிசம்பரில் உலகளாவிய டெண்டரை ஐசிஎப் அறிவித்தது.

கடந்த மாதம் டெண்டரில் 6 நிறுவங்கள் கலந்து கொண்டனர். அதில், ஏலத்தில் பங்கேற்ற ஆறு நிறுவங்களில் ஐந்து நிறுவனங்கள் அரசுக்கு சொந்தமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட், பாரத் இண்டஸ்ட்ரீஸ், சங்ரூர், எலக்ட்ரோவேவ்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் (பி) லிமிடெட், மேதா சர்வோ டிரைவ்ஸ் பிரைவேட் லிமிடெட், பவர்நெடிக்ஸ் எக்யூப்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட்,

ஆனால், ஆறாவது நிறுவனமான சி.ஆர்.ஆர்.சி லிமிடெட் என்பது சீன அரசு நிறுவனமாகும். இந்த நிறுவனம் இந்திய துணை நிறுவனத்துடன் இணைந்து  ஏலம் எடுக்கும் பணியில் பங்கேற்றது. இதனால், வந்தே பாரத் ரயில்களை தயாரிப்பதற்காக ஒரு சீன நிறுவனம் இணைந்து ஏலம் எடுத்ததற்கு அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஐஐடி) கருத்து  தெரிவித்தது.

வர்த்தகர்கள் கூட்டமைப்பு  மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதியிருந்தது. இந்நிலையில், அந்த டெண்டரை ரயில்வே துறை ரத்து செய்துள்ளது. அதற்கு பதிலாக மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் புதிதாக டெண்டர் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே டெண்டர் ரத்து செய்யப்பட்டதன் காரணத்தை குறிப்பிடவில்லை.

கடந்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி அன்று புது தில்லி-வாரணாசி வழித்தடத்தில் வந்தே பாரத் ரயிலின் முதல் ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து  துவங்கி வைத்தார். பின்னர், புதுடெல்லி மற்றும் ஸ்ரீ மாதா வைஷ்ணோதேவி கத்ரா இடையே இரண்டாவது வந்தே பாரத் ரயில் சேவையை உள்துறை அமைச்சர் அமித் ஷா  கடந்த ஆண்டு அக்டோபர் 3 -ம் தேதி கொடியசைத்து  துவங்கி வைத்தார்.

டெண்டரில் 6 நிறுவங்களில் ஒரு சீன நிறுவனம் என்பது தெரியவந்ததால் தான் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Published by
murugan

Recent Posts

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…

6 hours ago

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…

10 hours ago

RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…

10 hours ago

என்னது..!! செல்பாேன் கட்டணம் மீண்டும் உயர்வா.? ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி.!

டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…

10 hours ago

”வென்றால் மாலை.., இல்லை என்றால் பாடை” – சீமானின் பரபரப்பு பேச்சு.!

சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…

12 hours ago

க்ரீன் சிக்னல் கொடுத்த அர்ஜுன்.., 13 வருட வெளிநாட்டு காதலனை மணக்க போகும் அஞ்சனா.!

சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…

12 hours ago