இந்தியாவில் ஆக்ஸ்போர்டு போன்ற பிரசித்தி பெற்ற பல்கலைகளின் கிளைகள் துவங்கப்பட வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி, இந்திய பல்கலைகளில் பயின்றவர்கள் மைக்ரோ சாப்ஃட், கூகுள்,ஹெச்.சி.எல் போன்ற நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் உள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டுப் பல்கலைகளின் கிளைகள் இந்தியாவில் துவங்கப்பட்டால் மேலும் திறமைமிக்கவர்களை உருவாக்க முடியும்’ என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலிருந்து சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைகளில் படிக்கச் செல்கின்றனர். இதனால் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் வெளிநாடுகளுக்கு செல்வதாக கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இருப்பினும் வாஷிங்டன் பல்கலை, லண்டன் ஸ்கூல் ஆப் எகானாமிக்ஸ், மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் போன்ற பல்கலைகள் இந்தியாவில் கிளைகள் ஏற்படுத்த விரும்பவில்லை. ஆனால், எம்சிகில் பல்கலை, சிட்னி பல்கலை போன்றவை இந்தியாவில் கிளைகள் ஏற்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளன. மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதைத் தவிர்க்க இந்தியாவிலும் பிரசித்தி பெற்ற பல்கலைகளின் கிளைகள் துவங்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் கருத்து தற்போது தெரிவித்துள்ளனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…