தூக்கிலிடப்பட்ட நான்கு குற்றவாளிகளும் 6.00 மணிவரை தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பார்கள் என தகவல்…

Default Image

கடந்த 2012-ம் ஆண்டில் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் வீசப்பட்டார்.  அவருக்கு இங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டார். பின்  13 நாள் சிகிச்சைக்குப்பின் அவர் உயிரிழந்தார். இதையடுத்து நிர்பயா பாலியல் வன்கொடுமை கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கில் ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேரை டெல்லி சீர்மிகு காவலர்கள்  கைது செய்தனர்.

Image result for நிர்பயா

பல்வேறு சட்ட போராட்டத்திற்கு மத்தியில் இந்த குற்றவாளிகளுக்கு தற்போது சரியாக 5.30 மணியளவில் தூக்கிலிடப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர்கள் அந்த தூக்கு மேடையிலேயே தூக்கில் தொங்கியபடி 6.00 மணிவரை அதாவது அரைமணிநேரம்  தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்