Categories: இந்தியா

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Published by
மணிகண்டன்

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைக்கிறது. வெப்பநிலை அதிகரித்துள்ள காரணத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைகள், வயதானோர் குறிப்பிட்ட  வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், முடிந்த வரையில் நண்பகல் வெயிலில் வேலை செய்வதை தவிர்க்கவும் அரசு அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்த தகவலின்படி, அடுத்த 5 நாட்களுக்கு கிழக்கு மற்றும் தென் இந்திய பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

IMD அறிவிப்பின்படி, கேரளா மாநிலம் கோட்டயத்தில் 38.5 டிகிரி செல்சியஸ், பாலக்கோட்டில் 41 டிகிரி செல்சியஸ், ஆலப்புழாவில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகபட்சமாக பதிவாகியுள்ளது என்றும், ஆந்திராவில், ஆரோக்கியவரம் பகுதியில் 41 டிகிரி செல்சியஸ், கர்னூவில் 45.2 டிகிரி செல்சியஸ், பெங்களூருவில் 38.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது என்றும், தமிழகத்தில் தர்மபுரியில் அதிகபட்சமாக 41.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா , ஆந்திரா , தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், கேரளா மற்றும் தமிழகத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பநிலை நிலவும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வழக்கத்தை விட ஆண்டுதோறும் அதிகரிக்கும் வெப்பநிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியார்கள் கூறுகையில், அதிகரிக்கும் வெப்பநிலைக்கு காலநிலை மாற்றம் ஓர் காரணமாக கூறப்பட்டாலும், பிரதான காரணமாக கூறப்படுவது காற்றில் ஈரப்பத அளவு வெகுமளவு குறைந்ததே என்றும், வெப்ப காற்றின் திசை மாறுபாடு காரணமாகவும் ஆண்டுதோறும் வெப்பநிலை மற்றும் வெப்பஅலை அதிகரிக்க காரணமாக அமைகிறது என்றும் இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

 

 

Published by
மணிகண்டன்

Recent Posts

”சேட்டன் வந்நல்லே… சேட்டை செய்ய வந்நல்லே” மீண்டும் கேப்டனாக களமிறங்கும் சஞ்சு சாம்சன்.!

பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…

2 minutes ago

“வக்பு சொத்துகளை மத்திய அரசு அபகரிக்க நினைக்கிறது!” ஆ.ராசா கடும் தாக்கு!

டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…

25 minutes ago

வக்பு வாரிய திருத்த சட்டம் : பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

43 minutes ago

“டெல்லி நாடாளுமன்றமே வக்பு சொத்தா மாறியிருக்கும்” மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

1 hour ago

மும்பை அணியிலிருந்து விலகும் ஜெய்ஸ்வால்.! கோவா அணியில் கேப்டன் பதவி?

மும்பை: உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட, மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC சான்றிதழ் கேட்டிருக்கிறார்…

1 hour ago

கடலூரில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி விஜய் என்கவுண்டர்.!

கடலூர் : கடலூரில் போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.…

2 hours ago