அலி காஷிப் ஜானை பயங்கரவாதியாக அறிவித்தது இந்திய உள்துறை அமைச்சகம்!

Default Image

பாகிஸ்தானை சேர்ந்த அலி காஷிப் ஜானை பயங்கரவாதியாக அறிவித்தது இந்திய உள்துறை அமைச்சகம்.

கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் பதான்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் அலி காஷிப் ஜானை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967ன் கீழ் பயங்கரவாதியாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கைபர் பக்துன்க்வாவில் உள்ள சார்சடாவில் வசிக்கும் ஜான், பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர் என்றும், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முக்கிய திட்டமிடல் குழுவின் செயல்பாட்டுத் தளபதியாகவும் ஒரு பகுதியாகவும் இருந்தார் என தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள பதான்கோட் விமானப்படை நிலையத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலை நடத்தியவர் ஜான் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 1-2 இடைப்பட்ட இரவு பஞ்சாபில் உள்ள பதான்கோட் விமானப்படை தளத்தின் மீது எல்லைக்கு அப்பால் பதுங்கியிருந்த பலத்த ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் குழு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், ஏழு பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர்.

தேசிய புலனாய்வு முகமையால் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் பல்வேறு வழக்குகளில் ஜெய்ஷ் இம் பயங்கரவாதி குற்றம் சாட்டப்பட்டவர் என்றும், இதில் பதான்கோட் விமானப்படை நிலைய பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்குகளில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதாகவும் எம்ஹெச்ஏ தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் அமைந்துள்ள JeM ஏவுதல் பிரிவுகளில் இருந்து லி காஷிப் ஜான் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், அவர்களின் பயிற்சிக்காகவும், இந்தியாவில் உள்ள இலக்குகளில் தாக்குதல் திட்டங்களை ஒருங்கிணைக்கவும் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்