CAA App: குடியுரிமை திருத்தச் சட்டத்தில் விண்ணப்பிக்க புதிய செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கான இணையதளம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில் ‘CAA-2019’ என்ற செல்போன் செயலி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 11ஆம் தேதி குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது.
2014 டிசம்பருக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பொளத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வழிசெய்கிறது. எனினும், மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் குடியேறிய இஸ்லாமியர்களுக்கு இத்தகுதி தரப்படவில்லை.
இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் விண்ணப்பிக்க புதிய செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பில் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது indiancitizenshiponline.nic.in என்ற இணையதளத்தில் ‘CAA-2019’ செயலியை பதிவிறக்கம் செய்யலாம். குடியுரிமை (திருத்தம்) சட்டம் 2019-ன் கீழ் விண்ணப்பங்களைச் செய்வதற்கான ‘CAA-2019’ செயலி அதிகாரபூர்வமாக செயல்பாட்டுக்கு வருகிறது” என்றார்.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…