கொரோனாவுக்கு மருந்து தயாரித்த இந்திய நிறுவனங்கள்.. யார்யாருக்கு இந்த மருந்துகள் கொடுக்கலாம்? முழுவிபரம் இதோ!!

Published by
Surya

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், முன்னணி மருந்து நிறுவனங்களான சிப்லா, க்ளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ் மற்றும் ஹெட்டெரோ ஆகிய நிறுவனங்கள், கொரோனா நோய்க்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்துள்ளது.

சீனா, வுஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் உலகளவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை தடுக்கும் விதமாக, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பல நாடுகள் மிக தீவிரமாக முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் முன்னணி மருந்து நிறுவனங்களான சிப்லா, க்ளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ் மற்றும் ஹெட்டெரோ ஆகிய நிறுவனங்கள், கொரோனா நோய்க்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்தனர். அதில் சில மருந்துகள்,

க்ளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ்:

க்ளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ் மருந்து நிறுவனம், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக, ஃபேபிஃப்ளூ என்ற பெயரில் ஆன்டிவைரல் மருந்தான ஃபாவிபிராவிரை அறிமுகப்படுத்தியது. மும்பையைச் சேர்ந்த இந்த மருந்து நிறுவனம், இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஒப்புதலை பெற்று, மிதமான கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. அதில் ஒரு மாத்திரையின் விலை, ரூ. 103 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

ஹெட்டெரோ நிறுவனம்:

அதனை தொடர்ந்து, ஹைதராபாத்தை மையமாக கொண்டு செயல்படும் ஹெட்டெரோ எனும் மருந்து நிறுவனம், கொரோனா சிகிச்சைக்காக ரெம்டேசிவிர் மருந்தை “கோவிபோர்” (Covifor) எனும் பெயரில் அறிமுகம் செய்தது. இந்த மருந்துக்கு, Drug Controller General of India DCGI அனுமதி வழங்கியுள்ளது.

இந்த மருந்து, கொரோனவால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா மற்றும் டெல்லி மாநிலங்களில் சிகிச்சைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருந்து, ஊசி மூலம் உடம்புக்குள் செலுத்தப்படும். 100 ml கொண்ட இந்த மருந்தின் விலை ரூ5,000-6,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிப்லா நிறுவனம்:

மற்றொரு இந்திய மருந்து நிறுவனமான சிப்லா நிறுவனம், தனது சொந்த ரெமிடெசிவிரை “சிப்ரேமி” (Cipremi) என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்க்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்து, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு இந்த மருந்தை கொடுக்கலாம் என தெரிவித்தனர். மேலும், இந்த மருந்து மருந்துக்காக விலையை இன்னும் சிப்லா நிறுவனம் நியவிக்கவில்லை.

Published by
Surya

Recent Posts

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்? சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு பதில்.!

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்? சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு பதில்.!

சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…

10 minutes ago

ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.…

41 minutes ago

2 நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அவர்களின் அழைப்பை…

1 hour ago

அடுத்த ஆஸ்கர் விருது வழங்கும் விழா எங்கு? எப்போது? வெளியானது அறிவிப்பு.!

லாஸ் ஏஞ்சலஸ் : திரைப்படத் துறையில் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா உலகளவில் திரைத்துறையில் சிறந்து விளங்கும்…

1 hour ago

பண மோசடி வழக்கு: நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்.!

செகந்திராபாத் : ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட…

2 hours ago

சைலண்டாக சம்பவம் செய்யும் குட் பேட் அக்லி! தமிழகத்தில் எவ்வளவு வசூல் தெரியுமா?

சென்னை :  அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியான…

2 hours ago