இராணுவத்தின் முப்படைகளும் கொரோனா எதிர்ப்பு பணியாளர்களுக்கு மரியாதை

Published by
Kaliraj
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊர​டங்கு நாட்களின் போதும்  ஆபத்தைப் பொருட்படுத்தாமல் முன்னிலையில் பணியாற்றிக்கொண்டிருக்கும், மருத்துவத்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், ஊடகத்துறையினருக்கு ஆகியோருக்கு  நன்றி தெரிவிக்கும் விதமாக
அந்த முன்னிலைப் பணியாளர்களுடன் ராணுவத்தின் ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் விதமாக நாளை சில முக்கிய நடவடிக்கைகளில் முப்படை வீரர்கள் ஈடுபட உள்ளதாக இந்திய இராணுவ தலைமை தளவதி பிபின் ராவத்  ஏற்கனவே கூறினார்.
அதன் விளைவாக இன்று, இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் அந்த முதன்மை பணியாளர்களுக்கு மரியாதை செலுத்த ஆரம்பித்துள்ளனர்.  இதில், இந்த நிகழ்ச்சியில் மிக்-29, சுகோய்-30, ஆகிய விமானங்கள் டெல்லி வான்பரப்பில் 30 நிமிடங்கள் பறந்து மரியாதை செலுத்தியது.  இந்திய விமானப்படை ​மற்றும் கடற்படை ​ஹெலிகாப்டர்கள் மூலம் கொரோனா சிகிச்சை வழங்கும்  அனைத்து முக்கிய மருத்துவமனைகள், காவலர் நினைவு சின்னங்கள் மீது மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இதேபோல்,  கடற்படை மற்றும் கடலோர காவல்படை கப்பல்கள் கடலில் அணிவகுத்து மரியாதையும் இந்த முதன்மை பணியாளர்களுக்காக நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜம்மு-காஷ்மீர் தால் ஏரி மேற்பரப்பில் இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் பறந்து தங்கள் மரியாதையை செலுத்தினர். அதேபோல தலைநகர் டெல்லியில் இந்தியா கேட், தேசிய காவல்துறை நினைவு அருங்காட்சியகம், ஆர்எம்எல் மருத்துவமனை உட்பட பல்வேறு பகுதிகளின் மேற்புறங்களின் மீது இந்திய விமானப்படையின் விமானங்கள் பறந்து கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் களப்பணியாளர்களின் சேவையை பாராட்டினர். சென்னையில் ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் ராணுவம் செலுத்திய மரியாதைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மருத்துவர்கள், செவிலியர்கள் கைகளை உயர்த்தி நன்றி தெரிவித்தனர்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

41 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago